திருப்பூர் ராஜராஜேஸ்வரி கோவிலில் நவராத்திரி சண்டியாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2016 05:09
திருப்பூர்: திருப்பூர் குமார்நகர் கிழக்கு ராஜராஜேஸ்வரி முத்துக்கருமாரியம்மன் கோவில் 19ம் ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு, மகாசண்டி யாகம் துவங்கியது. நிகழ்ச்சியை முன்னிட்டு தினமும் காலை 7:30 மணிக்கு தேவி மகாத்மியம், சண்டிஹோமம், துர்கா ஹோமம், மாலை 6:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடக்கும். அக்.10 காலை 7:00 மணிக்கு சரஸ்வதி பூஜையும், அக்.11 மதியம் 12:00 மணிக்கு ராஜேஸ்வரியம்மன், கருமாரியம்மனுக்கு மகாசண்டி ஹோமமும் நடக்கிறது, மாலை 6:30 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறும். சண்டி யாகத்தை மயிலாடுதுறை வேதாகம பாடசாலை முதல்வர் ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார், திருமுருகன்பூண்டி முத்து சிவசுப்ரமணிய சிவாச்சார்யார் ஆகியோர் நடத்துகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.செந்தில் செய்துள்ளார்.