பதிவு செய்த நாள்
20
அக்
2016
12:10
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, 4.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கும் பணி துரிதவேகத்தில் நடந்து வருகிறது. திருத்தணி முருகன் மலைக்க�ோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். மலைக்கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள், வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து, கோவில் நுழைவு வாயிலுக்கு ஒரு கி.மீ., துாரம் நடந்து செல்லவேண்டியுள்ளது. பக்தர்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் செல்லவேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து, கோவில் நிதியில் இருந்து, நிழற்குடை அமைக்க, 4.80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு டெண்டர்விடப்பட்டு, மலைக்கோவிலில் உள்ளஆர்.சி.சி., மண்டபத்தில் இருந்து, வள்ளி கல்மண்டபம் வரை, நிழற்குடை அமைக்கும் பணி, துரிதவேகத்தில் நடந்து வருகிறது. இப்பணிகள், ஓரிரு நாட்களில் முடிந்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என, க�ோவில் நிர்வாகம் தெரிவித்தது.