விழுப்புரம்: பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் இலவச சிறப்பு தியான முகாம் நடந்தது. வளவனுார் மேற்கு அக்ரஹாரம் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் இலவச சிறப்பு தியான முகாம் நடந்தது. முகாமிற்கு, வளவனுார் தி.மு.க., நகர செயலாளர் ஜீவா, டாக்டர் முருகையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், வாழும் கலை, மன அழுத்தத்தில் இருந்து விடுதலை, நேர்மையான எண்ணங்கள், தற்கொலையில் இருந்து விடுபடுதல் உள்ளிட்ட தியான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை, நிர்வாகி பிரம்மா குமாரர் செல்வமுத்துக்குமரன் செய்திருந்தார்.