பதிவு செய்த நாள்
24
அக்
2016
12:10
ராசிபுரம்: ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவில் ஐப்பசி திருத்தேர்விழா முன்னிட்டு, வரும், 31ல் பூவோடு பற்றவைத்தல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. நவ., 1ல் கொடியேற்று விழா, 2ல் செல்லாண்டியம்மன் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், அக்கினி குண்டம் பற்றவைத்தல், 3ல் அக்கினி குண்டம் பிரவேசித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்காக, வளையல் கடைகள், போண்டா, பஜ்ஜி கடைகள், பாத்திரக் கடைகள், போன்றவை அமைக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், சிறுவர், சிறுமியரை மகிழ்விக்க, சர்க்கஸ், ராட்டினம் அமைக்கும் பணியும் நடக்கிறது.