சக்தி பீடங்களில் ஜ்வாலாமுகி (தீப்பிழம்பு) பீடம் என அழைக்கப்படும் தலம் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர். சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட அம்பிகையின் நாக்கு விழுந்த தலம் இது. இங்கு அம்பிகை தீப்பிழம்பாக காட்சியளிக்கிறாள். சந்நிதியில் தீ நாக்குக்கே பூஜை செய்கிறார்கள். இங்கு ஓடும் அலக்நந்தாநதியின் நடுவிலுள்ளதிட்டுப்பதியில் காளி யந்திரம் ஒன்று இருந்தது. அது தினமும் ஒருவரை பலி வாங்கிக் கொண்டிருந்தது. ஆதிசங்கரர் அந்த கல்லைத் தலைகீழாக வைக்கும்படி ஆணையிட்டு, அதன் பலிவாங்கும்தன்மையை போக்கினார்.