ஜலகண்டேஸ்வரர் கோவிலில் முதல்வர் ஜெ.,வுக்கு மோட்ச தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2016 12:12
வேலூர்: தமிழக முதல்வர் மறைவையொட்டி, வேலூர், ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு இறந்தார். இதையடுத்து, அவரது ஆத்மா சாந்தியடைய, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 10:30 மணிக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.