Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜலகண்டேஸ்வரர் கோவிலில் முதல்வர் ... முதல்வர் ஜெ., மறைவிற்கு கோவில்களில் மோட்ச தீப வழிபாடு! முதல்வர் ஜெ., மறைவிற்கு கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூன்று ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த கோவில்: பெண்கள் பூட்டை உடைத்து திறந்ததால் பரபரப்பு
எழுத்தின் அளவு:
மூன்று ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த கோவில்: பெண்கள் பூட்டை உடைத்து திறந்ததால் பரபரப்பு

பதிவு செய்த நாள்

07 டிச
2016
12:12

புதுச்சேரி: இருதரப்பு மோதல் பிரச்னையால், மூன்று ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த கோவில் பூட்டை உடைத்து அப்பகுதி பெண்கள் பூஜை செய்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டை செயின்ட் பால்பேட் பகுதியில் ஏழை முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைப்பது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. ஒரு தரப்பினர் கோவிலை புனரமைத்து, 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, எதிர்தரப்பு புகார் எழுப்பியதால், தகராறு ஏற்பட்டது. இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலை இரு தரப்பினரும் சேர்ந்து பூட்டு போட்டு பூட்டினர். கடந்த 3 ஆண்டுகளாக கோவிலில் பூஜைகள், திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், சில மாதங்களாக செயின்ட் பால்பேட் பகுதியில் தொடர்ச்சியாக இறப்பு சம்பவங்கள் நடந்தது. கோவில் பூட்டி கிடப்பதால்தான் இதுபோன்ற துக்க சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் கருதினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கோவிலை திறக்க முடிவு செய்தனர். நேற்று காலை பெண்கள், பூட்டை உடைத்து கோவிலை திறந்தனர். கோவில் வளாகத்தை சுத்தம் செய்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், இருதரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் தலைமையில் இருதரப்பினர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar