சென்னை தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையம் அருகே ஆபத்சகாய விநாயகர் கோயில் உள்ளது. இங்கு மஞ்சள் நிற விபூதி வழங்கப்படுகிறது. வீடு கட்ட கடைக்கால் குழி தோண்டும்போது மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்டவரே இத்தல விநாயகர். அப்படி மண்ணுக்குள்ளிருந்து வந்த மூலவரோடு மஞ்சள், குங்குமமும் சேர்ந்து கிடைத்ததால் இங்கு மஞ்சள் நிற விபூதி வழங்குகிறார்கள்.