கயிலாயத்தில் பார்வதிக்கு சிவன் பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். அதை முருகன் மறைவாக இருந்து கேட்டதால் அவருக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க பூலோகம் வந்து தவத்தில் ஆழ்ந்தார். அவருக்கு சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தனர். இந்த சிவனுக்கு திருப்பரங்குன்றத்தில் சிவன்கோயில் அமைக்கப்பட்டது. இதை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயில் என்பர். இக்கோயிலை தரிசித்த பின்னரே திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் செல்லவேண்டும் என திருப்பரங்கிரி புராணம் கூறுகிறது. சன்னதி தெருவிலேயே இந்தக் கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து வழிபட்டால் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம்.