பழம், நெய், சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்து செய்யப்படும் நைவேத்தியம் திருமதுரம் எனப்படும். கடவுளுக்கு வாசனை தைலம் கொண்டு அபிஷேக ஆராதனை செய்வது தைலதாரை எனப்படும். திருப்பதி பெருமாளின் மேல் இடம் பெற்று பின்பு பிரசாதமாக வழங்கப்பெறும் பச்சைக்கற்பூரம் முதலியன சேர்ந்த கலவைப் பண்டம் பாதரேணு எனப்படுகிறது. தெய்வங்களின் விக்ரகங்களை நிறுத்தும் ஆதாரக்கல் பீடம் எனப்படும். திருமஞ்சனக் காலத்தில் கோயில் மூர்த்திக்கு அணிவிக்கப்படும் ஆடை ஜலபத்திரம் எனப்படும். கோயிலில் பூஜை செய்யுமிடம் வேதிகை எனப்படும். சுவாமியின் வீதிப்புறப்பாட்டில் நிவேதனத்துக்கு வைத்திருக்கும் தேங்காய், பழம் திருக்கண் சாந்து எனப்படும்.