கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவிலுள்ளது திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோயில். இங்குள்ள மூகாம்பிகை சன்னதி முன்பு உயரமான மேரு இருக்கும். இதை மேருதந்த்ரம் என்பர். சக்தியின் தத்துவமாக இந்த மேரு இருக்கிறது. இதனை வணங்கினால் அனைத்து ஆற்றலும் பெறுவோம் என்பது நம்பிக்கை.