திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் கோயிலில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜைகள், ஆராதனைகள் நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்திய கிரீஸ்வரருக்கு மாலை 5.30 முதல் இரவு 12.30 மணிவரை நான்கு கால பூஜைகள் அபிஷேகங்கள் நடந்தது. சன்னிதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு இரண்டு காலை பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது. மலைமேலுள்ள காசி விஸ்வநாதர், கீழரத வீதியில் எழுந்தருளியுள்ள குருநாத சுவாமிக்கு இரண்டு கால அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது.மலைக்குப்பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு ஐந்து கால பூஜைகள் நடந்தது. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சிக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தது.