முத்துமாரியம்மன் கோயில் விழா: பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2017 06:04
கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயிலில், உடல் முழுவதும் சேறு பூசி சேத்தாண்டி வேடமணிந்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 31 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் 13ம் ளில் சேத்தாண்டி திருவிழா, என்ற வினோத நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி சேத்தாண்டி வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அவர்களின், கையில் அக்கினி சட்டி, கரும்பாலை தொட்டில் எடுத்தனர். பலர் பூக்குழி இறங்கினர். பக்தர் மரகதவேல் கூறுகையில், ‘ அம்மன் அருளால் உடலில் அம்மை, தோல் நோய்களில் இருந்து விடுபட வேண்டி உடலில் சேறு பூசி சேத்தாண்டி வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறோம். குழந்தை வரம் வேண்டி கரும்பாலை தொட்டில் எடுத்தும், அக்கினிசட்டி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்த பாரம்பரிய நேர்த்தி கடனை செலுத்த தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு வருகின்றனர், என்றார்.