ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. நேற்று அதிகாலை, சமயபுரம் மாரியம்மனுக்கு பால், இளநீர், தேன், பழவகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. காலை, 10:00 மணியளவில் சமயபுரம் மாரியம்மன் உற்சவமூர்த்தி ரதம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. 10:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் தேரை கோவில் வளாகத்தை சுற்றி இழுத்து வந்தனர். வரும், 21ல், சிறப்பு அபிஷேகம் மற்றும் குங்கும அர்ச்சனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படவுள்ளது.