கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3).. எதிர்பாராத வருமானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2017 04:05
சாமர்த்தியசாலியான கும்ப ராசி அன்பர்களே!
சுக்கிரன் மே 31ல் மீனத்தில் இருந்து மேஷத்திற்கு மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை தருவார். மே 28ல் 4ம் இடத்திற்கு செல்லும் புதனால் அனுகூலமான பலன் உண்டாகும். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தர காத்திருக்கிறார். மற்ற கிரகங்களால் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் விடாமுயற்சியும், அக்கறையும் தேவைப்படும். உங்களின் தீவிர முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போகாது. 10ம் இடத்தில் இருக்கும் சனி, 8ம் இடத்தில் இருக்கும் குரு, 7ம் இடத்தில் இருக்கும் ராகு ஆகியோரால் நன்மை எதிர்பார்க்க முடியாது. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7ம் இடத்து பார்வை சாதக பலன் அளிக்கும். அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறு வந்தாலும் அதை முறியடித்து வெற்றி காண்பீர்கள். மனதில் தைரியம் குறையாது. பண வரவு படிப்படியாக அதிகரிக்கும்.
குடும்பத்தேவை அனைத்தும் பூர்த்தியாகும். மே 30 க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மே 28க்கு பிறகு புதன் 4ம் இடத்தில் இருப்பதால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மே 19,20ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். பெண்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். மே 15 ஜூன் 10,11,12 ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே 25,26ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி, பகைவர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு முதலியன மே 26 க்கு பிறகு மறையும். அதுவரை வரவு,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அதன் பின் கூட்டாளிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்படும். விய õபாரிகளுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். கடன் பாக்கி அடைபடும். சந்திரனால் மே 16,17,18,21,22, ஜூன் 13,14ல் சில தடைகள் குறுக்கிடலாம். மே 30,31 ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கப் பெறலாம். ஜூன் 12ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக திடீர் பயணம் செல்ல நேரிடும்.
பணியாளர்களுக்கு பணியிடத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. மே 28 க்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். ஜூன் 8,9 ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. முக்கிய கோரிக்கைகளை அப்போது கேட்பது நல்லது. ஜூன் 12 க்கு பிறகு வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கலைஞர்களுக்கு சுக்கிரன் பலமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்தபடி புகழ், பாராட்டு வந்து சேரும். அரசிடம் இருந்து விருது, பட்டம் போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் சிறப்பாக காணப்படுவர். சிலர் எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறுவர். செவ்வாயால் தீய சேர்க்கைக்கு ஆளானவர்கள் அதில் இருந்து மே 26 க்கு பிறகு விடுபடுவர். மே 27,28,29ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு விரும்பிய நிறுவனத்தில் இடம் கிடைக்கும். ஆசிரியர்கள் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசு கிடைக்கப் பெறுவர். ஜூன் 12 க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.
விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் காணலாம். எள், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு,விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும். பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அக்கம் பக்கத்தினருடன் இருந்த கருத்துவேறுபாடு மறையும். மே 27 க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மே23,24ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்க பெறலாம். ஆடம்பர பொருள் வாங்க வாய்ப்புண்டு.
பரிகாரம்: * சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு தீபம் * ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை * தினமும் காலையில் சூரிய தரிசனம்
நல்ல நாள்: மே 15, 19, 20, 23, 24, 30, 31,ஜூன் 1, 2, 8, 9, 10, 11, 12 கவன நாள்: ஜூன் 3,4 சந்திராஷ்டமம். அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: வெள்ளை, பச்சை
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »