மரங்களை வெட்டி இயற்கை சூழ்நிலையை அழிக்கும் கும்பல் நாட்டில் நிறைய உள்ளது. இவர்கள், இங்கே வேண்டுமானால் மரம் வெட்டி, விற்ற பணத்தில் மகிழ்ச்சி காணலாம். அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள், சுகத்தில் திளைக்கலாம். ஆனால், இறப்புக்குப்பின் இவர்கள் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டதும் தலைகீழாகக் கட்டித் தொங்க விடப்படுவார்கள். ஏன் தெரியுமா? மரத்தடியில் மனிதர்களும், கிளைகளில் பறவைகளும் தங்கி இளைப்பாறுவதுண்டு. பறவைகளின் கூடும், மரத்தில் தான் இருக்கும்.இது பற்றி நபிகள் நாயகம், “மனிதர்களும் மிருகங்களும் தங்கி இளைப்பாறக் கூடிய நிழல் கொடுக்கும் மரத்தின் கிளையை அவசரத்தேவை இல்லாமல், எவன் ஒருவன் வெட்டுவானோ அவனை அல்லாஹ், நரகத்தில் தலைகீழாகத் தொங்க விடுவான்,” என்கிறார். மின்சாரக் கம்பிகளில் மரக்கிளைகள் உரசினாலோ, பிறவகை அத்தியாவசியத் தேவை தவிர மரக்கிளைகளில் கைவைத்தால், தலை கீழாக தொங்குவது உறுதி. மரவெட்டிகளே! தலை கீழாக தொங்க தயாராக இருங்க.