சிவகங்கை மாவட்டம், ஏரியூர் மலை மீது மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இம்மலையில், ஜோதி எனும் அதிசய விருட்சம் ஒன்றுள்ளது. சித்திரை, வைகாசி மாதங்களில் மட்டும் இரவு நேரத்தில் இம்மரத்திலிருந்து பிரகாசமாக ஒளி வீசுகிறதாம். பல மருத்துவ குணங்கள் உடைய இந்த மரத்தினை பெண்கள் தொடுவதில்லை.