பதிவு செய்த நாள்
16
ஜூன்
2017
12:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோவிலில், ஜூலை 5ல், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம், காமராஜர் வீதியில் சித்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சுயம்பு மூர்த்தியான மூலவருக்கு, மஞ்சள் நீர் கூத்தர், என்ற பெயரும் உண்டு. இங்கு, சித்தர்கள் பலர் வழிபட்டு, முக்தி பெற்றதால், மூலவர் சித்தீசர் என்று அழைக்கப்படுகிறார்.இக்கோவிலில், பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி, அன்னாபிஷேகம் மற்றும் விசேஷ நாட்களில், பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இக்கோவிலுக்கு கடந்த, 1998ல் கும்பாபிஷேகம் நடந்தது.இந்நிலையில், 19 ஆண்டுகளுக்கு பின், ஜூலை, 5ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, 1.50 லட்சம் ரூபாய் செலவில், திருப்பணிகள் நடந்து வருகின்றன.