திருப்பரங்குன்றம் கோயிலில் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2017 10:06
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. உற்சவர், தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. தீபாராதனைக்கு பின் கோயில் திருவாட்சி மண்டப ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளினார். அங்கு ஓதுவார்களால் தேவாரம் பாடப்பட்டு, 30 நிமிடங்கள் சுவாமி ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. ஜூலை 7 வரை ஊஞ்சல் விழா நடக்கும்.
முப்பழ பூஜை: உச்ச நிகழ்ச்சியாக ஜூலை 8 அன்று உச்சிகால பூஜையின்போது மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, துர்க்கை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்சவர்கள் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் மா, பலா, வாழை முப்பழங்கள் படைக்கப்பட்டு பூஜை நடக்கும். இரவு யானை மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளி, கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டு தீபாராதனை நடக்கும்.