கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியர் மாலா மற்றும் ஆசிரியர்களின் ஏற்பாடின்படி, மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், மாணவ, மாணவியர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, வருண பகவானை வழிபாடு செய்தனர்.