பதிவு செய்த நாள்
21
ஜூலை
2017
11:07
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், ராகு பகவான் மங்கள ராகுவாக தோஷங்களை நீக்குவதாக ஐதீகம். 27ம் தேதி மதியம், 12:48 மணிக்கு, ராகு பகவான், சிம்ம ராசியில் இருந்து, கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதை ஒட்டி, நாகநாதர் கோவிலில், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள், பரிகாரம் செய்து கொள்ளலாம். ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, ராகு பகவானுக்கு, 21 முதல் 24ம் தேதி வரை, முதல் கட்ட லட்சார்ச்சனையும், 31 முதல் ஆக., 3 வரை, இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடக்கிறது. நாகை மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில், சவுந்தர நாயகி அம்மன் நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. கேது பகவான், கும்ப ராசியில் இருந்து, மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது.