உடுமலை: ஆடி மாத இறுதி வெள்ளியையொட்டி,உடுமலை சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அம்மனுக்கு விசேஷ நாளாக சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன்களை செலுத்துவதும் இம்மாதத்தில் அதிகம் நிகழ்கிறது.ஒவ்வொரு வாரம், வெள்ளிக்கிழமையன்றும், அம்மனுக்கு விதவிதமான அலங்காரங்கள் நடக்கிறது. அம்மன் மனமிறங்கி அருள்புரிய, கோவில்களில் கூழ் ஊற்றுவதும் இம்மாதத்தில் விசேஷமாகும். நேற்று, ஆடி மாத இறுதி வெள்ளிக்கிழமை என்பதால், சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. விளக்கு பூஜை, விசேஷ வழிபாடுகள் நடந்தது. மாரியம்மன், காமாட்சி அம்மன் கோவில்களில், பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.