சக்தி பூஜை: வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2017 12:08
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் சக்தி பூஜை நடந்தது. இக்கோயிலில் வருடந்தோறும் ஆடி மாத தேய்பிறை பஞ்சமி நடசத்திரத்தன்று சக்தி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.இந்தாண்டும் ஆக.12ம் தேதி இப்பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி நள்ளிரவு 12:00 மணியளவில் சித்தருக்கு சிறப்பு அபிேஷகங்கள் செய்யப்பட்டன.தொடர்ந்து சித்தருக்கு அவரது இஷ்ட தேவதையான வராகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சக்தி பூஜை நடத்தப்பட்டது.கிடா, கோழிகள் பலியிடப்பட்டு சுவாமிக்கு அசைவ உணவு படையல் போடப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.