பதிவு செய்த நாள்
14
ஆக
2017
12:08
காஞ்சிபுரம்: ஆடி மாதத்தின், கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா உற்சாகமாக நடந்தது. ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால், ஆடி பிறந்தது முதல், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில், அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடைசி ஞாயிறான நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் நாகலுாத்து தெரு, நடராஜப்பெருமாள் கோவில், தும்பவனம் மாரியம்மன் ஆடித்திருவிழாவையொட்டி, காலை, 8:00 மணிக்கு, வனத்துர்க்கையம்மன் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார். கூழ்வார்த்தல், 12:00 மணிக்கு நடந்தது. மாலை, 3:00 மணிக்கு ஊரணிப் பொங்கல் வைக்கப்பட்டது. மாலை, சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்தார். சின்ன காஞ்சிபுரம், சேஷாத்ரிபாளையம் பழனி தெரு, கருக்கினில் அமர்ந்தவள் கோவில், கோட்ராம்பாளையம் தெரு, தும்பவனத்தம்மன் மற்றும் ரேணுகாம்பாள் கோவில் உட்பட பல அம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழா நடந்தது.