மானாமதுரை: மானாமதுரை அருகே முல்லைக்குளத்தில் உள்ள ஆதிபராசக்தி மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 3 நாள்களுக்கு முன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.நேற்று காலை 8:40 மணிக்கு கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடத்தப்பட்டன. மதியம் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள்,முல்லைக்குளம் மக்கள் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.