Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நன்மை தரும் 108 விநாயகர் கோயிலில் ... ஆதிபராசக்தி மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஆதிபராசக்தி மந்தையம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி ஞாயிறு நாளில் நாகருக்கு பால் ஊற்ற அலைமோதிய பக்தர் கூட்டம்
எழுத்தின் அளவு:
ஆவணி ஞாயிறு நாளில் நாகருக்கு பால் ஊற்ற அலைமோதிய பக்தர் கூட்டம்

பதிவு செய்த நாள்

21 ஆக
2017
11:08

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறை முன்னிட்டு நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர் சன்னதி எல்லா கோயில்களிலும் காணப்படும். ஆனால் நாகரை மூலவராக கொண்ட அரிய கோயில்களில் ஒன்று நாகர்கோவில் நாகராஜாகோயில். இந்த கோயிலால்தான் தான் குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் என பெயர் பெற்றது. இங்கு மூலஸ்தானம் இன்னும் ஓலைக்கூரையில்தான் இருக்கிறது. இங்குள்ள பாம்பு புற்று மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இங்கு நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனால் ஞாயிற்றுக் கிழைகளில் அதிக அளவில் பெண் பக்தர்கள் வருகின்றனர். அதுவும் ஆவணி மாதம் ஞாயிறு நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். நேற்று முதல் ஞாயிறு. அதிகாலை நான்கு மணிக்கே பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். மதியம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 ... மேலும்
 
temple news
தேனி: தேனி மாவட்டத்தில் சிவன், முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar