பதிவு செய்த நாள்
28
ஆக
2017
11:08
விருதுநகர்: சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் கடந்த ஐந்து நாட்களாக யாகங்கள் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனிதநீரை முத்து பட்டர், வாசுதேவ பட்டர், அனந்த பட்டர் தலைமையிலான பட்டர்கள் நேற்று காலை 8:20 மணிக்கு கலசத்தில் ஊற்றினர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மணவள மாமுனி ஜீயர் சுவாமிகள், திருக்கோஷ்டியூர் மாவதவன் சுவாமிகள் தலைமை வகித்தனர். ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன் , முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் பாலகிருஷ்ணன், பாலகங்காதரன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மண்டபதாரர்கள் சீனிவாசன், தேவராஜன், ஸ்ரீநிவாச அண்ட் கோ பலராமன், ஸ்மார்ட் சிட்டி கிருஷ்ணமூர்த்தி, ஹயக்கிரிவாஸ் இண்டர்நேசனல் பள்ளித் தலைவர் வெங்கடேச பிரசாத், தாளாளர் ஜெயக்குமார், டாக்டர் மூக்கையா, சிவகாசி கம்மவர் சங்க செயலாளர் பொன்னுசாமி, ரூபி ஸ்பார்க்லஸ் ராஜப்பன், ஜெயபிரகாஷ் எண்டர்பிரைசஸ் ரமேஷ், எல்.வி.ஆர். பயர் ஒர்க்ஸ் ராதாகிருஷ்ணன், சித்தா மேட்ச் இண்ட்ஸ்ட்ரீஸ் சங்கரநாராயணன், ராஜா தங்க மாளிகை ஜெகநாதராஜா, ஜே.சி.ஐ., சிவகாசி டைனாமிக் தலைவர் பகவதி, வெங்கடேஸ்வரா பயர் ஒர்க்ஸ் பட்டாபிராமன், ராஜ்கோ மினரல் வாட்டர் ரவி, சிந்து டிரேடர்ஸ் சுப்புராஜ், நீலு பேப்பர்ஸ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.