பாண்டூர் பாண்டவ சகாய பெருமாள் கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2017 11:08
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பாண்டூர் கிராமத்தில் ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ பாண்டவ சகாய பெருமாள் கோயில் உள்ளது. இப்பகுதியில் பாண்டவர்கள் வனவாசம் இரு ந்தபோது இத்தலத்தில் பெருமாளை சேவித்து சகாயம்பெற்றுள்ளனர். மிகவும் பழமைவாய்ந்த இக்கோயிலின் திருப்பணிகள் செய்துமுடிக்கப்பட்டு இன்று மஹா சமப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதனைமுன்னிட்டு பாண்டூர் பாண்டவ சகாய பெருமாள் கோயிலில் கடந்த 25ம் தேதி யாகசாலை பூஜைகள் விஷ்வக்ஸேந பூஜைகளுடன் தொடங்கப்பட்டது.
காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வலம்வந்து விமானத்தை வந்தடைந்தது. சரியாக 9 மணிக்கு புனிதநீர் கோபுர கலசத்தில் ஊற்றி மஹா சம்ப்ரோக்ஷணம் நடத்திவைக்கப்பட்டது. யாக சாலை பூஜை மற்றும் மஹாசம்ப்ரோக்ஷணத்தை சர்வசாதகம் சித்தமல்லி ஸ்ரீராம் பட்டாச்சாரியார், கோயில்அர்ச்சகர் கோவிந்தராஜ் பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமையிலானோர் செய் துவைத்தனர். மஹா சம்ப்ரோக்ஷணத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள் மற்றும் தாயாரை சேவித்தனர். சம்ப்ரோக்ஷணத்திற்கான ஏற்பாடுகளை தலைவர் ராதாகிருஷ்ண ன் தலைமையிலான திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர். தொடர்ந்து மாலை திருக்கல்யாணமும், 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகமும் நடைபெறுகிறது.