பதிவு செய்த நாள்
13
செப்
2017
10:09
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில், கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மின் விளக்குகளால் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இன்று, காலை, 7:00 மணிக்கு, ஸ்ரீ வீரராகவப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, 7:00 மணிக்கு, உற்சவர் கிருஷ்ணருக்கு சங்குப்பால் பூஜை நடக்கிறது; இரவு, 7:30க்கு, ஊஞ்சல் சேவை நடக்கிறது. முன்னதாக, மாலை, 5:00 மணிக்கு, 1,008 பள்ளி குழந்தைகள், கண்ணன், ராதை வேடமணிந்து, காட்சியளிக்கும், ‘எங்கெங்கு நோக்கினும் கண்ணனே’ நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், குழந்தைகளின், கலாச்சார நடனங்கள், பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அரசு பள்ளி மாணவ, மாண வியர் பங்கேற்கும் வள்ளி கும்மி நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவில், நாளை காலை, 7:00 மணிக்கு, சிறப்பு திருமஞ்சனம்; மாலை, 6:00க்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட கலாச்சார விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுவதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், ராயபுரம் வேணுகோபால வாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வெண்ணைத்தாழி அலங்காரத்தில் கிருஷ்ணன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.