தூய்மை விருதால் மீனாட்சி கோயில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2017 12:10
மதுரை: துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பத்து சீர்மிகு தலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முதலிடம் பெற்றது. இப்பணியில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தக்கார் கருமுத்து கண்ணன் வரவேற்றார். கலெக்டர் வீரராகவராவ் முன்னிலை வகித்தார். பரிசு வழங்கி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது: துாய்மை இந்தியா திட்டத்தில் மீனாட்சி அம்மன் கோயில் முதலிடம் பெற்று மத்திய அரசின் விருதுகளை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் பெற்று வந்துள்ளனர். இவ்விருதுக்கு காரணமான கோயில் துாய்மை பணியாளர்களின் செம்மைப்பணி போற்றுதலுக்குரியது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 276 நிரந்தர பணியாளர்கள், தொகுப்பூதியர்களுக்கு தலா 3000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். வைகை ஆற்று மைய மண்டபம் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இணை கமிஷனர் நடராஜன் நன்றி கூறினார்.