பதிவு செய்த நாள்
16
அக்
2017
02:10
மற்றவர் கருத்தை ஏற்று நடக்கும் மிதுன ராசி அன்பர்களே!
மாதம் முழுவதும் குரு, சுக்கிரன், சனி நற்பலன் கொடுப்பர். அக். 27-க்கு பிறகு புதன் சாதகமான இடத்தில் இருக்கிறார். இதனால் பின்தங்கிய நிலை மாறும். ஆடம்பர வசதி பெருகும். தடைகள் படிப்படியாக விலகி எதிர்பார்ப்பு நிறைவேறும். குரு பகவானால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுப நிகழ்ச்சி இனிதே நடக்கும். பொருளாதார வளம் சிறக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும்.
குடும்பத்தில் சுக்கிரனால் பொன், பொருள் சேரும். சமூகத்தில் மதிப்பு உயரும். அக்.27க்கு பிறகு முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன்,- மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நவ.2- க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். நவ.7,8,9ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். நவ.3,4- ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். அக்.18,19, நவ.14,15- ல் உறவினர் வகையில் வீண் பகை ஏற்பட வாய்ப்புண்டு.
உடல்நலனில் அக்கறை தேவை. பயணத்தின் போது சற்று கவனம் தேவை.தொழில், வியாபாரத்தில் சனிபகவானால் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். இருப்பினும் புதனால் அலைச்சல் ஏற்படலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் அக். 27 க்கு பிறகு வீடு திரும்புவர். போட்டியாளர்களால் குறுக்கிட்ட இடையூறு மறையும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். செவ்வாயால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். அக்.22,23,24-ல் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்புண்டு.
பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள், அக்.27க்கு பிறகு ஒன்று சேர்வர். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர். எதிர்பார்த்த கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். நவ.1,2 சிறப்பான நாட்களாக அமையும்.
கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர். புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காணலாம். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அக். 20,21, நவ.16- ல் குழப்பம் ஏற்பட்டு மறையும்.
மாணவர்கள் ஆசிரியர்களின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். புதனால் அக்.27-க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்கப் பெறுவர். நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் வளர்ச்சிக்கு வழி உண்டாகும். பெற்றோர் பெருமைப்படும் விதத்தில் நற்செயலில் ஈடுபடுவர்.
விவசாயிகள் அதிக முதலீடு செய்யும் பயிர்களைத் தவிர்க்கவும். உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம். அக்.27- க்கு பிறகு வருமானம் அதிகரிக்கும்.
பெண்களின் வாழ்வில் குதூகலம் உண்டாகும். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக செயல்படுவர். நவ.2-க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். அக். 25,26- சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழாவுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். நவ.12,13-ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
-
* நல்ல நாள்: அக்.22, 23, 24, 25, 26, நவ.1, 2, 3, 4, 7, 8, 9, 12, 13
* கவன நாள்: அக். 27,28,29- சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 3, 5
* நிறம்: வெள்ளை, மஞ்சள்
* பரிகாரம்
● வெள்ளி ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு
● வெள்ளியன்று மாரியம்மனுக்கு மாவிளக்கு
● பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் தீபம்.