இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் தாமோதர தீபத்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2017 11:10
மதுரை: மதுரை மணிநகரம் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் (நவ.18) தீபாவளியன்று விசேஷ தாமோதர தீபத் திருவிழா நடைபெற்றது. கடந்த அக்.5ம் தேதி இந்த தாமோதர தீபத் திருவிழா இஸ்கான் கோயிலில் துவங்கியது.
வருடந்தோறும் ஒரு மாத காலம் இந்த திருவிழா நடைபெறுகிறது. வரும் நவம்பர் 4ம் தேதி வரை இவ் விழா தொடர்ந்து நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சன்னதி முழுவதும் வண்ண மலர்களாலும், நூற்றுக்கணக்கான தீபங்களால் தினமும் அலங்கரிக்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் தினமும் ஒரு விசேஷ அலங்காரமும் நடைபெறுகிறது. தீபாவளி மற்றும் லெக்ஷ்மி பூஜையை முன்னிட்டு விசேஷ தாமோதர தீப அலங்காரம் நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இதில் பங்கேற்று அனைவரும் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து இத்தீபத்திருவிழா நவ.4 வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்படத்தக்கது. வேத Oஉõஸ்திரங்களில் இவ்வாறு பகவானுக்கு இந்த தீப ஆரத்தி காட்டுவதன் மூலம் ஒருவர் எல்லா விதமான நற்பலன்களையும் பெறலாம் என்பதுடன், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளையும் பெறலாம் என்று குறிப்படப்பட்டுள்ளது.