பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில் 35 நாட்களில் ரூ.ஒரு கோடியே 86 லட்சத்து, 54 ஆயிரம் கிடைத்துள்ளது.
பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் ரொக்கமாக ரூ.ஒரு கோடியே 86 லட்சத்து, 54 ஆயிரத்து 831ம், தங்கம் - 842கிராம், வெள்ளி- 8,960 கிராம், வெளிநாட்டு கரன்சி- 334 கிடைத்துஉள்ளது.
இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவிஆணையர் சிவலிங்கம், முதுநிலை கணக்கீட்டாளர் மாணிக்கவேல், கோயில் பணியாளர்கள், வங்கிப்பணி யாளர்கள் பங்கேற்றனர்.