பதிவு செய்த நாள்
03
நவ
2017
12:11
சின்னசேலம்: சின்னசேலத்தில் உள்ள மூன்று கோவில்களில் ஒரே நாளில் கும்பாபிஷேக விழா நடந்தது.
சின்னசேலம் நகரில் உள்ள மாரியம்மன், வினாயகர், அம்சகுளம் எல்லையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.
காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள், வினாயகருக்கும், மாரியம்மனுக்கும் முன்றாம் கால யாக பூஜைகள் செய்து, கும்பாபிஷேகமும் நடந்தது. அம்சகுளம் எல்லையம்மனுக்கு 10:00 மணி முதல் 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜையில் மோகன் குருக்கள் தலைமையில், 21 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.
இதில் தொகுதி எம்.எல்.ஏ., உதயசூரியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவருக்கு, முன் னாள் சேர்மன் அண்ணாமலை மற்றும் விழா குழு சார்பில், பூரண கும்ப மரியாதை அளித்து, வரவேற்றனர்.
விழாவில் அ.தி.மு.க., அம்மா அணி நகர செயலாளர் மாரிகண்ணு, அகமுடையார் மகாஜன சங்க தலைவர் சுப்பிரமணியன், அரிமா சங்க தலைவர் ஜெயபால், ரகுவரன், ஏகாம்பரம், சபரி எலட்ரிக் காந்திராஜன், கள்ளக்குறிச்சி சிவநாராயணா ஆதிசேஷன், ராமசாமி, பாலு, சுரேஷ் குமார், பூமாலை, கலியன், பாண்டியன் மற்றும் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள், மகளிர் குழுவினர், இளைஞர் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.