Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெட்டப்பாக்கம் மடுகரை ... சின்னசேலத்தில் 3 கோவில்களில் ஒரே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூழம்பந்தல் சிவன் கோவிலில் உள்ள செடிகள் அகற்றப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2017
12:11

கூழம்பந்தலில் உள்ள, 1,000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள, கூழம்பந்தல் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது.

கூழம்பந்தல், ராஜேந்திர சோழனின் அரசியல் குருவான, ஈசான சிவபண்டிதரின் ஊர். ராஜேந்திர சோழன், கங்கையை வென்று திரும்பிய போது, அரியலூருக்கு அருகில், கங்கைகொண்ட சோழபுரம் என்னும் நகரத்தை நிர்மாணித்து, பிரகதீஸ்வரருக்கு, தஞ்சை பெரிய கோவி லைப்போல, கோவில் கட்டி, கங்கை நீரால், குடமுழுக்கு செய்தான். அவ்வூருக்கு, கங்கை கொண்ட சோழபுரம் என, பெயரிட்டான்.

ஈசான பண்டிதர், தன் ஊரிலும், அதே போல் கோவில் கட்ட வேண்டும் என, வேண்டினார்.
அதே போன்று, சிறிய கற்கோவிலை, ராஜேந்திரனும், அங்கு கட்டி, இறைவனுக்கு, கங்கை கொண்ட சோழீஸ்வரமுடையார் என்றும், அவ்வூருக்கு, கங்கைகொண்ட சோழபுரம் என்றும் பெயரிட்டார்.

அச்சிறப்பு மிக்க கோவில், சிதைந்திருந்தது. அதை, தமிழக தொல்லியல் துறை, பழமை மாறா மல் புதுப்பித்து, பாதுகாத்து வருகிறது. ஆனால், அதன் முகமண்டபக் கூரையில், ஆங் காங்கே, மரக்கன்றுகள் முளைத்துள்ளன. அதேபோல், அகழாய்வில் கிடைத்த, துர்க்கை சிலைகோவில் வளாகத்தில் கிடத்தப்பட்டுள்ளது. இது, பக்தர்களை வருத்தம் அடைய செய்து ள்ளது.

இது குறித்து, தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது:
கங்கைகொண்ட சோழபுரம் என்னும் பழமையான ஊரில் உள்ள, பெருமாளுக்கு, கூழ் வார்த்து படைப்பதால், பிற்காலத்தில், கூழம்பந்தல் என, பெயர் மாறியது. அவ்வூர் சிவன் கோவில் சுவர், கூரைகளில் வளரும் செடிகள், கோவிலை பிளவு படுத்தி, சிதைவடைய செய்யும்.

அதனால், தொல்லியல் துறை, அவற்றை அகற்றி, ரசாயன கலவை தெளிக்க வேண்டும். அதேபோல், வளாகத்தில் கிடத்தப்பட்டுள்ள, துர்கை சிலைக்கு பீடம் அமைத்து, நிறுத்த வேண்டும். அப்போது தான் பாதுகாப்பாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar