பதிவு செய்த நாள்
18
நவ
2017
12:11
நாமக்கல்: சபரி மலை ஐயப்பனுக்கு, பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். கார்த்திகை முதல் நாளான நேற்று, நாமக்கல் - மோகனூர் சாலை, ஐயப்பன் கோவிலில், ஐயப்ப சுவாமி அறக்கட்டளை சார்பில், 52ம் ஆண்டு விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், நீண்ட வரிசையில் வந்து குருசாமியிடம் மாலை அணிந்து, சுவாமி தரிசனம் செய்தனர். டிச., 6 காலை, 9:00 மணிக்கு மூர்த்தி ஹோமம், லட்சார்ச்சனை, இரவு, 7:00 மணிக்கு பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது. டிச., 7 காலை, 7:30 மணிக்கு ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவருக்கு பாலாபி ?ஷகம், டிச., 8 காலை, 9:00 மணிக்கு லட்சார்ச்சனை, 10:00 மணிக்கு பலப்பட்டறை மாரியம்மன், மாலை, 4:30 மணிக்கு துர்க்கை அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. டிச., 9 காலை, 7:00 மணிக்கு லட்சார்ச்சனை, 108 வலம்புரி சங்காபி?ஷகம், தீபாராதனை நடக்கவுள்ளது.
* குமாரபாளையம், ப.வேலூர், பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் என, மாவட்டம் முழுவதும் ஐயப்பன் கோவில்களில், பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் துவக்கினர். தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்க உள்ளன.