சென்னை, குரோம்பேட்டையிலுள்ள கணபதிபுரம் செங்கஞ்சேரி அம்மன் கோயிலில் பவுர்ணமி வழிபாடு வெகு விசேஷம். அன்று அம்மனுக்கு மருதாணி இலைகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் இதை கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்தப் பிரசாதத்தைப் பெறும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நிகழும் என்பது ஐதீகம்.