பதிவு செய்த நாள்
11
டிச
2017
12:12
கரூர்: கரூரில், ஐயப்ப பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர். கரூர், பசுபதிபாளையம் லட்சுமி விநாயகர் ஐய்யப்ப பக்தர்கள் நடத்தும், பந்தள மாமணி ஐயப்பனின் பத்தாம் ஆண்டு திருவிழா கடந்த, 5ல் சதாசிவம் கோவிலில் ஆராட்டு விழா நடத்தப்பட்டு காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 8ல், ஐயப்பன் சுவாமி திருவீதி உலா நடந்தது. அன்று இரவு, ஏழு சப்த கன்னிகளுக்கு அருள் அழைத்து நெய் விளக்கு ஏற்றப்பட்டது. கடந்த, 9ல் ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று இரவு, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி வழிபட்டனர். லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் ஆழிகுழு, ஊர் பொதுமக்கள், பெரியவர்கள் சார்பில் விழா நடத்தப்பட்டது.