திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் கோவில்களில், தனுர் மாதத்திற்கான பூஜை ஏற்பாடுகள், தீவிரமாக நடக்கின்றன.மார்கழியில், ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதால், இம்மாதம் முழுவதும் சைவ, வைணவ மற்றும் அம்மன் கோவில்களில், அதிகாலை நடை திறக்கப்படும். சன்னிதிகளில் விஷேச அபிஷேகம் நடக்கும். அந்த வகையில், இந்தாண்டு மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நாளை துவங்குகின்றன. இதையொட்டி, திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்று வட்டார கிராம கோவில்களில் துாய்மை பணி, பக்தி பாடல்கள் ஒலிக்க வைப்பது, நுழைவாயிலில் வண்ண கோலம் போடுவது உள்ளிட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன.