பதிவு செய்த நாள்
11
ஜன
2018
11:01
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியன்று, ஆகாஷனை சொர்ண காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. ரோஜா, வடை போன்ற மாலைகள் சாத்தப்பட்டன. சிவலோகநாதர், சிவலோகநாயகி, முருகர் ஆகியோருக்கு பூஜை செய்த பின், காலபைரவருக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பூசணி, எலுமிச்சையிலும், கார்த்திகை விளக்கிலும் தீபம் ஏற்றி காலபைரவரை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.