பதிவு செய்த நாள்
14
பிப்
2018
12:02
காஞ்சிபுரம்: சிவராத்திரி விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில், நேற்று காலையில் இருந்தே, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரத்தில், சிவராத்திரி விழாவை முன்னிட்டு, அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஒவ்வொரு கோவிலை பொறுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நேற்று மாலை பிரதோசம் முடிந்து, அதை தொடர்ந்து, சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. பக்தர்கள் ஒவ்வொரு கோவிலாக சென்று வழிபட்டனர்.காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில், நேற்று காலை முதல், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.கச்சபேஸ்வரர் கோவிலில், நேற்று இரவு மும்மூர்த்திகள் நினைவு இசை நிகழ்ச்சிகள், இரவு, 10:00 மணிக்கு நாதஸ்வரம் தவில் கச்சேரி மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடந்தன.அதே போல், ஏகாம்பரநாதர் கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு இரவு முழுவதும் நடந்தது.காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளம் சுற்றிலும் உள்ள, 10 சிவன் கோவில்களிலும் சிறப்பு தரிசனம் நடந்தன.மேலும் நகரை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் சேர்ந்து மொத்தம், 165 சிவனை, நேற்று பக்தர்கள் வழிபட்டனர்.