பதிவு செய்த நாள்
14
பிப்
2018
12:02
நாகப்பட்டினம்: கந்துாரி விழாவை முன்னிட்டு, நாகை தர்காவின் அனைத்து மினவராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது.நாகை அடுத்த, நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவில், 461வது ஆண்டு கந்துாரி விழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 26ம் தேதி இரவு, நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 27 அதிகாலை, நாகூர் தர்காவில், சந்தனம் பூசும் வைபவம் நடக்க உள்ளது.விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று காலை, 6:30 மணிக்கு, தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப், துவா ஓதிய பின், தர்காவின் 5 மினவராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.