பதிவு செய்த நாள்
14
பிப்
2018
12:02
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அருகேயுள்ள சூலக்கல் விநாயகர், மாரியம்மன் கோவிலில் நேற்று சிவராத்திரி விழாவை ஒட்டி, காலை, 7:30 மணிக்கு சுயம்பு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, மூலவராக வீற்றிருக்கும் மாரியம்மனுக்கு சிவன் பாதி, சக்தி பாதியான அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில், சூலக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.