பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், இன்று மயானக்கொள்ளை உற்சவம் நடக்க உள்ளது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் விழா நேற்றுகொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் கோபால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையும், இரவு கொடி மரத்தில்கொடியேற்றமும், சக்தி கரக ஊர்வலமும் நடந்தது. இரண்டாம் நாள் விழாவாக இன்று காலை 10 மணிக்கு மயானகொள்ளை நிகழ்ச்சி நடக்க உள்ளது. நாளை மற்றும் 17ம் தேதியன்று தங்க நிற மரபல்லக்கில் அம்மன் ஊர்வலமும், 18ம் தேதி மாலை ஐந்தாம் நாள் விழாவாக மாலை5:00 மணிக்கு தீமிதி விழாவும், 19 ம் தேதி தங்க நிற மர பல்லக்கில் அம்மன் ஊர்வலமும், 20ம் தேதி முக்கிய விழாவான திருத்தேர்வடம் பிடித்தல் மாலை 5:00 மணிக்கும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ்,அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர்,கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன்,மேலாளர் மணி, சதீஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.