கோட்டை மாரியம்மன் கோயிலில் பூத்தமலருடன் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2018 10:02
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று துவங்கியது. கோட்டை மாரியம்மன் கோயில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில், ஆண்டுதோறும் மாசித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நேற்று மாலை 6:00 மணிக்கு பூத்தமலர் பூ அலங்காரத்துடன் திருவிழா துவங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 9:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவும், அம்மன் திருத்தேர்வீதியுலாவும் நடக்க இருக்கிறது.