மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2018 10:02
தேவதானப்பட்டி, தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இங்கு மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப். 13 ல் துவங்கியது. தேனி, திண்டுக்கல் மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்கின்றனர். அக்னி சட்டி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அவர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்றுடன் திருவிழா முடிவடைகிறது. பிப். 20 மறுபள்ளயம் நடக்கிறது.