அவிநாசி: அவிநாசி மற்றும் பூண்டி கோவில்களில், தீ மற்றும் பேரிடர் நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தீயைணப்பு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட சில கோவில்களில், அண்மையில் தீ விபத்துகள் ஏற்பட்டன. இது பேன்ற நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கை மற்றும் தீ விபத்து போன்றவை ஏற்படாமல் பாதகாப்பாக இருப்பது குறித்து, அனைத்து கோவில்களிலும் தீயணைப்பு துறை சார்பில் செயல் விளக்கம் நடத்த உத்தரவிடப்பட்டது. அவ்வகையில் நேற்று, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாதசாமி கோவில் ஆகியவற்றில், இதற்கான செயல் முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவிநாசி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) நவீந்திரன் தலைமையில் வீரர்கள் தீத்தடுப்பு, பேரிடர் மேலாண்மை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள், கோவில் ஊழியகள் மற்றும் பக்தர்களுக்கு, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.