பதிவு செய்த நாள்
24
மார்
2018
11:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் யானை, ருக்கு, 22 ஆண்டுகளாக, கோவிலின் அனைத்து விழாக்களிலும் பங்கேற்று வந்தது. தினமும், அதிகாலை, 5:00 மணிக்கு, குமரக்கோவில் கிணற்றிலிருந்து, சுவாமி அபிஷேகத்திற்கு, யானை தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம், உடல் நலக்குறைவால், யானை இறந்தது. ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பொதுமக்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.