திருப்பதி: திருமலை திருப்பதியில் நடந்துவரும் இலவச அன்னதான திட்டம் 33 வருடங்களை கடந்துள்ளது. கடந்த 1985ம் ஆண்டு இந்த திட்டம் துவக்கப்பட்ட போது 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் போடப்பட்டது. ஆனால் இன்று நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சாப்பிடுகின்றனர். இந்த அன்னதான திட்டத்திற்கென பல்வேறு பாங்குகளில் 937 கோடி ரூபாய் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது.
இந்த டெப்பாசிட் பணத்தில் இருந்து வரும் வட்டியைக்கொண்டு நடைபெறும் இந்த அன்னதான திட்டத்தின் பயன்கள் தற்போது வரிசையில் நிற்பவர்களுக்கும் கட்டிடங்களில் காத்திருப்பவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நீங்கள் எங்கு இருந்தாலும் நேரநேரத்திற்கு அன்னதானம் திருமை பெருமானின் அன்னதானம் தேடிவரும்.
திருமலைக்கு நடமாடும் புத்தகநிலையம் நன்கொடை: திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மீக புத்தகங்கள் அவர்கள இருக்குமிடத்திற்கு தேடிவழங்கும் வகையிலான நடமாடும் ஆன்மீக புத்தகநிலையத்தை கோல்கட்டாவைச் சேர்ந்த பிரகாஷ்ரெட்டி நன்கொடையாக வழங்கியுள்ளார். குளிர்சாதன வசதியுடன் சுமார் 18லட்ச ரூபாய் செலவில் இந்த நடமாடும் நியைம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வருமானம் உயர்கிறது: கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் கிடைத்த உண்டியல் வருமானத்தை விட இந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கிடைத்த உண்டியல் வருமானம் ஒன்பது கோடியே 44லட்ச ரூபாய் அதிகமாகும்.மொத்த மாத வருமானம் 95கோடியே 94லட்சமாகும்.92.99 லட்சம் லட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. 49லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் அன்னதான திட்டத்தில் சாப்பிட்டுள்ளனர்.86.5லட்சம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.