பதிவு செய்த நாள்
17
ஏப்
2018
11:04
ஸ்ரீபெரும்புதுார்: ராமானுஜர், 1,001ம் ஆண்டு விழாவில், நேற்று, பல்லக்கில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்தவர், வைணவ மகான் ராமானுஜர். ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், சித்திரை திருவாதிரை நட்சத்திரம் அன்று, ராமானுஜரின் உற்சவ விழா, ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ராமானுஜரின், 1,001ம் ஆண்டு அவதார விழா, கடந்த, 12ம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின், 5ம் நாளான நேற்று காலை பல்லக்கிலும், மாலை ஹம்ச வாகனத்திலும் ராமானுஜர், வீதியுலா சென்றார். மதியம், 1:00 மணி அளவில், ராமானுஜருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.